நாளை விடுமுறைக்கு செல்கிறேன் . ராணுவத்தில் சேர்ந்த புதிதில் விடுமுறைக்கு செல்வதை நினைத்தாலே மனது தித்திக்கும் . இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது . ஏன் என எனக்கே தெரியவல்லை . வயது வளர வளர பக்குவம் வந்துவிட்டதா . இல்லை எனக்குள் ஏற்பட்ட புதிய மாற்றங்களா .
என் வசம் இருக்கும் பதினாறு நாட்களை நல்ல முறையில் பயன் படுத்த வேண்டும் என நினைக்கிறன் . என்னை பாதித்த எழுத்தாளர்கள் அனைவரையும் போய் சந்திப்பது நிறைய நூல்கள் வாசிப்பது , வீட்ற்கு சென்று அம்மா , அப்பாவிற்கு சேவை செய்வது .
புதிய நண்பர்களை தேடிகொள்வது . என்னுடைய நிக்கி நாயுடன் சந்தோசமாக விளையாடி திரிவது , வீட்டிற்கு முன் இருக்கும் அரசமர நிழலில் அமர்ந்து தனிமையை ருசிப்பது .
ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக எதிர்கொள்வது என எத்தனையோ ஆசைகளுடன் அஸ்ஸாமில் இருந்து நாளை பயணிக்கிறேன்
வருகிற பத்தொன்பதாம் தேதி சென்னையில் திரு ஜெயமோகன் அவர்களை சந்தித்து பேசவேண்டும் என நினைத்துள்ளேன் .ஏழாம் உலகம் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை அவரிடம் பகிர்ந்து கொள்வேன் . பின் ஈரோடு சென்று வலைபதிவாளர்கள் கூட்டமொன்றில் கலந்து கொண்டு எனது ஊருக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டுளேன் .
புதிய மனிதர்களை தேடுகிறேன் , பல முகம் தெரியாத நல்ல உள்ளங்களுடன் பழக வேண்டும் என்ற ஆசை ஒன்றுமட்டுமே என்னை சுற்ற வைத்துக்கொண்டுள்ளது . தேடுதல் தானே வாழ்க்கையே ...
மை நேம் இஸ் பாண்ட்
-
இயக்குநர்,நடிகர் அழகம்பெருமாள் என்னுடைய நண்பர் அ.கா.பெருமாளின் மருமகன்.
பொதுவாக நிமிர்ந்த தலையுடன் கம்பீரமாக இருக்கும் அழகம்பெருமாள் மாமா முன்
பவ்யவமாக இர...
2 மணி நேரத்திற்கு முன்
.jpg)







